Monday, 30 March 2015

கழுத்தறுத்து கொல்லும் அன்பு

அன்பே அன்பே என்றேன் என்னை
அலட்சியப்படுத்திவிட்டாய் உனை
உயிரே உயிரே என்றேன் நீயோ
என்னை உதாசீனப்படுத்திவிட்டாய்
இப்போ வாழ்த்துச் சொல்லி உன்னை ...
வாழ்த்துகின்றேன் நீ வசந்தமாய் வாழ்க
உன் விழியில் இருந்து நான் விலகிச்
செல்கின்றேன் உனக்கு என் உறவு
வலிக்குதென்பதால் உன் அன்பின்
ஆழம் புரிகின்றது உன் அவலம் எனக்குத்
தெரிகின்றது, உன் காலைச் சுற்றிய பாம்பு
இன்று தீயில் விழுந்து கருகுகின்றது
உயிரே உயிரே என்று அரவணைக்க
ஆசைப்பட்டேன் நீயோ அன்பே அன்பே
என்று இதயத்தில் குத்திவிட்டாய்
குத்தியது நீ என்பதால் என்னால்
கத்தியழக்கூட முடியவில்லை
அழுகையின் சாபம் எங்கே உன்னை
ஆள்கொண்டு விடுமேயென்று.. ஆனால்
நீயோ மத்தியிலே என்னை வைத்து
கழுத்தறுத்து சென்றாயே.... புத்திசாலி
நீ என்று இப்போ முழுமையாகப்
புரிந்து கொண்டேன் என்னை சுத்தி சுத்தி
வரவைத்து சத்தமின்றி கொன்றுவிட்டாய்.. !

No comments:

Post a Comment