Monday, 30 March 2015

சேலை கட்டிய வெடிகுண்டு


இதயத்துக்குள் நுழைந்து கொண்டு தீ மிதிக்கிறாய்
தேகத்திலே எரிமலையை அள்ளி பூசிவைக்கிறாய்
கண்ணுக்குள்ளே கண்ணிவெடி கொண்டு சுற்றுறாய்
சேலைக்குள்ளே ஒழிந்து கொண்டு மாயம்செய்கிறாய்
காளை எந்தன் கட்டுக்குள்ளே நானும் இல்லடி கன்னி ...
உந்தன் கண்ணசைவில் நான் காணாமல் போனேண்டி ,
என் நாவறண்டு வார்த்தையின்றி முணுமுணுக்கிறேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் கவிதை என்கிறாய்
யாழெடுது மீண்டும் கீதம் உந்தன் மொழி அதை நான்
தினமும் கேட்பதினால் படைப்பேன் இனி பல கவி.....!
 

No comments:

Post a Comment