Monday, 30 March 2015

பெண்ணே பெண்ணுக்கு அடிமை

பெண் அடிமை ஒழிய என்று முரசு கொட்டும் கண்மணிகளே
உங்கள் அடிமை என்னவென்று உனக்குத்தான் தெரிந்ததுண்டோ
மருமகளாய் இருக்கையிலே மாமியாரைத் திட்டுகின்றாய்
நீயோ மாமியார் ஆனதுமே மருமகளை குட்டுகின்றாய்
வரதட்சனை கேட்பாருடன் வாழ நீ மறுத்தாயென்றால்...
வாலிபரின் வாட்டத்தை வானளவில் பார்த்திடலாம்
ஏச்சுப் பிழைப்பவரை எஜமானாய் ஆக்குகின்றாய்
தாலி கட்டுமுன் அவனோ தன் தாயைப் பார்க்கின்றான்
தாம்பாழத்தில் வைத்தபின் தலையை ஆட்டுன்றாள்
சாமியாய் இருந்து நீ அவளுக்கு சக்தியை கொடுக்காமல்
மாமியாய் இருந்து நீ ஏனோ மங்களம் பாடுகின்றாய்
மறுமகள் இவள் என்று மனதினில் நீ கொள்ளாது
மருமகள் என்று நீயோ மண்டியிட வைக்கின்றாய்
கந்துவட்டிக்கு கடன் வாங்கி கணவன் உனை காத்திட்டாலும்
திண்டு கெட்ட மனிதன் என்று கண்டபடி திட்டுகின்றாய்
மாமியார் சாமியாடுறாள் மருமகள் பாவியாகின்றாள்
ஐயகோ இங்கே யாரடா அடிமை யாருக்கு இங்கு அடிமை ???

No comments:

Post a Comment