Monday, 30 March 2015

சரியும் சரி இல்லை நீயும் நானும் தப்பானால்


தப்பு செய்தாலும் அது தப்பு என்று தெரிந்தாலும் அதை தப்பில்லாமல் சரியாக செய்யவேண்டும் , இங்கே தப்பு எல்லாம் தப்பும் இல்லை சரி எல்லாம் சரியும் இல்லை சரியென நினைத்து செய்யும் செயல்களால் சிலர் சரியில்லாமல் போகின்றார்கள் தப்பாக செய்வதினால் பலர் நிம்மதி அடைகின்றார்கள் என்று தெரிந்து கொண்டால் நான் தப்பும் செய்வேன் தவறாமல்,. சட்டபடி குற்றமாக இருக்கலாம் தர்மப்படி நியாயமாக இருக்க வேண்டும் என்பது என் கொள்கை.......... என் நீதிமன்றத்தில் ஆண்டவன் என்று ஒருவன் இருந்து வந்து கேள்வி கேட்டால் அவனுக்கும் இதே பதில் தான் என் தீர்பில் சட்டப்புத்தங்கள் கிடையாது அறிவைக் கேட்டு தீர்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை இங்கே மனசே சாட்சி மகிழ்வே நீதி உள்ளமே நீதிபதி ... தண்டனையில் இருந்து கூட ஒருவன் தப்பினாலும் நிம்மதி இழந்து ஒருவரும் வாழக்கூடாது இதுவே என் வாதம்... இதற்கு நீங்கள் வைக்கலாம் விவாதம்......................!!! 

No comments:

Post a Comment