Saturday, 16 January 2016

பத்தரமாத்து தங்கம்


பூவே எனக்கு புரியாத மொழியில்
புன்னகை செய்கின்றாய்

பாவை உன் மடியில் பாலகனாக்கி
பாவி ஏன் வதைக்கிறாய்

காலையில் வளரும் கதிரவன் போலே
கண்களில் மின்னுகிறாய்

மாலையில் உலாவிடும் சந்திரன் போலே
காளை நான் தேய்கிறேன்

மழையினில் நனைந்த மாந்தளிர் போலே
சேலைக்குள் ஒழிகின்றாய்

மலையிலே உறைந்த பனித்துளி போலே
உருகி நான் கரைகின்றேன்

கார்த்திகை மாதத்து காந்தள் மலர் போலே
என் கவிதைக்குள் நுளைகிறாய்

மார்கழி மாதத்து கார்முகில் போலே நான்
கவிமழை பொழிகிறேன்

தை மாதத்து தாமைரைப் பூபோலே தத்தை
நீ மெத்தையில் தவழ்கிறாய்

சித்திரை மாதத்து கத்தரிவெகுளி போலே
வியர்வையில் குளிக்குறேன்

என் பத்தரமாத்து தங்கமே நான் நித்திரை
பாயினில் தினம் பல சித்திரம் வரைந்திட
உன் ஒற்றுமை வேண்டுமே.!

No comments:

Post a Comment