Sunday, 24 January 2016

ஓவியம் பேசும் காவியம்



இடிந்து போகாதே என்னவனே என்றும்
இமைபோல் இருப்பேன் உன்னுடனே

உயிராய் உனக்குள் நான் இருந்து
உடைந்து போக விடமாட்டேன்

...
கடந்து போகும் கவலையெல்லாம்
தொடர்ந்து நீயும் நடை போடு

தாரம் என்று நினைக்காதே, தங்கைக்கு
நான் தாயுமாவேன் கலங்காதே

வரதச்சனை பிச்சைகேட்டு வருவோர்க்கு
என் வீட்டில் கொடுத்த சீதனச்சீர் மிச்சம்
இருக்கு வருந்தாதே.!

No comments:

Post a Comment