Saturday, 16 January 2016

அனாதையானது அன்பும் பண்பும்


கண்களில் காட்சிகள் மங்கிப்போச்சு
கற்பனை வளமோ வற்றிப்போச்சு
சரித்திரம் கூட தரித்திரம் ஆச்சு
நட்பினில் இன்று நாணயம் போச்சு
நல்லது கெட்டது மறந்து போச்சு
அன்பும் பண்பும் அனாதை ஆச்சு
பணமும் பதவியும் வல்லமையாச்சு
இல்லாமை இயலாமை நிறைஞ்சுபோச்சு
பொல்லாமை பொருளாமை ஆட்சியாச்சு
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ,இங்கே
விதைப்பதுயாவும் முளைத்திட்ட போதும்
வளர்ப்பவன் ஏனோ ........................................!!!

No comments:

Post a Comment