என்ன எழுதுகின்றேன் நான் என்னை
எழுதுகின்றேன் உன்னை தான் நான்
நினைத்து உண்மை எழுதுகிறேன்
கவிதை எழுதிகின்றேன் நான் உனை...
என் கவித்தாயே நீ என்று கவிதையாய்
எழுதுகின்றேன் என் கவிதையே...
புதுமை நீ என்று புது மையால் எழுதுகிறேன்
பழமை நான் என்ற வளமை வேண்டாமே
கடமை எனக்குண்டு நீ கொடுமை எண்ணாதே
சிலைகள் வடிக்கின்ற கலைகள் எனக்கில்லை
கொலை நீ செய்தாலும் விலை நான் போகேனே
தலைகூன மாட்டேன் மலைபோலே தடுக்காதே
என் தமிழே நீ இன்றி என் தாகம் தீர்ந்திடுமோ
நான் தனிமையானாலும் உன் மொழியில்
வாழ்ந்திடுவேன் தமிழே என் துணையாக !
எழுதுகின்றேன் உன்னை தான் நான்
நினைத்து உண்மை எழுதுகிறேன்
கவிதை எழுதிகின்றேன் நான் உனை...
என் கவித்தாயே நீ என்று கவிதையாய்
எழுதுகின்றேன் என் கவிதையே...
புதுமை நீ என்று புது மையால் எழுதுகிறேன்
பழமை நான் என்ற வளமை வேண்டாமே
கடமை எனக்குண்டு நீ கொடுமை எண்ணாதே
சிலைகள் வடிக்கின்ற கலைகள் எனக்கில்லை
கொலை நீ செய்தாலும் விலை நான் போகேனே
தலைகூன மாட்டேன் மலைபோலே தடுக்காதே
என் தமிழே நீ இன்றி என் தாகம் தீர்ந்திடுமோ
நான் தனிமையானாலும் உன் மொழியில்
வாழ்ந்திடுவேன் தமிழே என் துணையாக !

No comments:
Post a Comment