வாடி என் சக்களத்தி வழி தவறி வந்தாயோ
பொத்தி வைத்த மறுகணமே ஒத்திகைக்கு
ஆள் தேடி கொத்திச் செல்ல வந்தாயோ
கொள்ளிக் கட்டை கிடக்குதடி
மாமிசத்தை நான் மறந்து மாமனையே
தான் நினைத்து மாரியாத்தா முன்னாடி
மடியேந்தி தவம் இருந்து பெற்ற வரம்
நான் கொத்தாக பூத்திருந்த என் அத்தான்
மனதினிலே உன் பொத்தானை திறந்து
வைத்து பித்தாக்க நினைத்தாயோ
முத்தாக அவர் நெஞ்சில் சொத்தாக நான்
இருக்க உன் முந்தானை விலக்கி விட்டு நீ
பந்தாடத் தான் முனைந்தாயோ
தொண்ணூறு நாள் அவரை தொடாமல் நான்
இருந்ததினால் வல்லூறு போலே வந்து உன்
கள்ளூறும் விழிகள் கொண்டு அள்ளிச்செல்ல
பார்த்தாயோ ...................வாடி என் சக்களத்தி
கொள்ளிக்கட்டை கிடக்குதடி..!
பொத்தி வைத்த மறுகணமே ஒத்திகைக்கு
ஆள் தேடி கொத்திச் செல்ல வந்தாயோ
கொள்ளிக் கட்டை கிடக்குதடி
மாமிசத்தை நான் மறந்து மாமனையே
தான் நினைத்து மாரியாத்தா முன்னாடி
மடியேந்தி தவம் இருந்து பெற்ற வரம்
நான் கொத்தாக பூத்திருந்த என் அத்தான்
மனதினிலே உன் பொத்தானை திறந்து
வைத்து பித்தாக்க நினைத்தாயோ
முத்தாக அவர் நெஞ்சில் சொத்தாக நான்
இருக்க உன் முந்தானை விலக்கி விட்டு நீ
பந்தாடத் தான் முனைந்தாயோ
தொண்ணூறு நாள் அவரை தொடாமல் நான்
இருந்ததினால் வல்லூறு போலே வந்து உன்
கள்ளூறும் விழிகள் கொண்டு அள்ளிச்செல்ல
பார்த்தாயோ ...................வாடி என் சக்களத்தி
கொள்ளிக்கட்டை கிடக்குதடி..!

No comments:
Post a Comment