Saturday, 16 January 2016

தடை போடும் வலிகள்


செதுக்கி வைத்த சிற்பத்தில்
நொருங்கி விழுந்த துண்டுகள்
மரத்துபோன நெஞ்சில் உரத்து
கீறிய கோடுகள்

பொறுக்கி எடுக்கும் போதினில்
கையில் கிழித்த காயங்கள் கனத்த
உள்ளங்கள் உருகினால் கண்களில்
சிந்தும் குருதிகள்

கடக்க எண்ணி நடக்கையில் தடக்கி
விழுத்தும் நினைவுகள்....எழுந்து
செல்ல முனைகையில் கொழுக்கி
போடும் வலிகள் !

No comments:

Post a Comment