உருகிடும் உள்ளம் உணராது
போனால் பழகிடும் நெஞ்சம்
பரிதாபம் ஆகும்
வலிகளை சுமந்து வாழ்வது
பாவம் உயிரினை நீக்கினால்
தீர்ந்திடும் சாபம்
கடவுளாய் நினைத்து கைகூப்பி
நின்றேன் கருணையே நீ என்று
தவம் ஒன்று செய்தேன்
அன்பினைத் தேடிடும் பித்தனாய்
அலைந்தேன் கயவன் நீ என்று வரம்
ஒன்று தந்தாய்
ஏக்கத்தில் என்றேனும் என்னுயிர்
மாண்டால் தாக்கத்தில் உன் நெஞ்சம்
தடுமாறி மீண்டால்
மோட்ஷம் பெறாதவன் கல்லறையில்
சிறு பூச்செண்டாவது வைத்து ஒருதுளி
கண்ணீரை தூவிச்செல்.!!!

No comments:
Post a Comment