Saturday, 16 January 2016

சட்டம் இல்லா சம்பிரதாயம்

எட்டு எட்டாய் கணக்கு போட்டேன்
கட்டம் இதற்கு எதற்கு என்றாய்
மட்டுப் படுத்தி பேசாதே என்றேன்
விட்டு கொடுக்க இடமில்லை என்றாய்
தட்டில் போட்டு தாரை வார்த்தேன்
தொட்டுப் பார்த்து இதுவா என்றாய்
கட்டு கட்டாய் கொட்டிக் கொடுத்தேன்
பெட்டிக்குள்ளே பாம்பாய் சுருண்டாய்
கட்டில் மேலே சுகத்தைத் தேடிக்
குட்டி போட்ட நாய் போல் நிற்கும்
தட்டுக் கெட்ட உனக்கு சமைத்துப்போட
சட்டி பானை வாங்க வேண்டும்,.. உன்
சட்டைப் பையில் ஏதும் உண்டா, இல்ல
எனை உனக்கு கட்டிக் கொடுத்த வீட்டில்
பாட்டன் பாட்டி கொட்டப்பெட்டியில் ஏதும்
இருக்கா என்று பார்க்க சொல்லவா.......???

No comments:

Post a Comment