Monday, 18 January 2016

கனவை கலைத்த சேவல்


பற்றிய கைகள் ஒத்திகை பார்க்க
பொத்திய இதழ்கள் முத்திரை பதிக்க

குவிந்த விழிகள் வாளெனக் கிழிக்க
கூரிய மாங்கனி தேன் கனிகளாக...

சங்கினக் கழுத்தில் வெண்பனி பூக்க
மெல்லிய இடைகள் மெத்தை விரிக்க

செவ்வாழை தண்டுகள் போர்வைகளாக
மல்லிகை வாசம் மனதை துளைக்க

மன்மதக்கலையில் மங்கை சிவக்க
மானிடப்பிறப்பை மன்னவன் மறக்க

கூவிய சேவல் தூக்கத்தை குழப்ப
கொதித்தெழுந்தேன் என்ன கொடுமை !
 

No comments:

Post a Comment