Saturday, 16 January 2016

பரிகாரம் சொல்லும் அதிகாரம்

ஜகதலப்பிரதாபன் ஜென்மத்தில் நான் இல்லை
அகலிகை அம்சத்தில் அமைந்தவள் நீ இல்லை

அகராதி கற்பிக்கும் அதிகாரம் இல்லேனும்
பரிகாரம் செப்பிக்கும் பக்குவம் உண்டேடி

பகலவன் வருகை முன் பரவசம் கொள்ளடி
பால்குடம் ஏந்தி எனை பற்றிக்கொள்ளேண்டி

சுடரொளி விழிகொண்டு ...... நீ சுட்டென்னை எரித்தாலும்
மடல் வாழைத்தண்டோரம் மடியாமல் நான் வாழ்வேன்

கொடையான உன் மேனி படியாமல் போனாலும்
தடையேதும் இல்லாமல் விடை கூறி மகிழ்வேனே !

No comments:

Post a Comment