ஜகதலப்பிரதாபன் ஜென்மத்தில் நான் இல்லை
அகலிகை அம்சத்தில் அமைந்தவள் நீ இல்லை
அகராதி கற்பிக்கும் அதிகாரம் இல்லேனும்
பரிகாரம் செப்பிக்கும் பக்குவம் உண்டேடி
பகலவன் வருகை முன் பரவசம் கொள்ளடி
பால்குடம் ஏந்தி எனை பற்றிக்கொள்ளேண்டி
சுடரொளி விழிகொண்டு ...... நீ சுட்டென்னை எரித்தாலும்
மடல் வாழைத்தண்டோரம் மடியாமல் நான் வாழ்வேன்
கொடையான உன் மேனி படியாமல் போனாலும்
தடையேதும் இல்லாமல் விடை கூறி மகிழ்வேனே !

No comments:
Post a Comment