Saturday, 16 January 2016

உண்மை இல்லா உரிமை


எங்கு பார்த்தாலும் ஒரே குளறல்
எல்லாமே வெறும் சாடல்,..ஏன்
தான் இந்த உளறல்.......... ?

அன்பில் இல்லை தூய்மை
காதலில் இல்லை உண்மை

உறவில் இல்லை உரிமை
நட்பில் இல்லை நேர்மை

வாழ்வில் இல்லை இனிமை
செயலில் இல்லை கடமை

பேச்சில் மட்டுமே திறமை
பெயரில் வாழுது பெருமை

அப்பப்பா எத்தனை வறுமை
எல்லாமே இங்கே வெறுமை

இது தான் இப்போ நிலமை
எதற்கு இந்தக் கொடுமை ?

No comments:

Post a Comment