புகை நடுவிலே பகை இருப்பதாய்
விதை விதைக்கிறாய்
உயிர் இல்லாமல் உடல் கிடப்பதாய்
பறை சாற்றுகிறாய்
உறவே அறுந்து தான் போனதாய் ...
உற்சாகம் கொள்கிறாய்
உலகே எதுவென்று புரியாத மூடர்கள்
ஓலங்கள் போடுகிறார்
வேற்று உலகத்தில் கூத்து நடப்பதை
ஆந்தைகள்அறிந்திடுமோ
பார்த்து சிரிக்கின்ற கூட்டுத் தலைகளின்
பித்தம்தெளிந்திடுமோ
சத்தங்கள் போட்டால்தான் முத்தங்கள் என்று
சாத்திரம் ஒன்றுமில்லை
முற்றத்தில் பூக்கவும் முத்ததில் வியர்க்கவும்
சத்தங்கள் தேவையில்லை
நான் ஒற்றையில் நிற்பதாய் நீ சத்தங்கள்
செய்வதால் நம் ஒற்றுமை சாவதில்லை...!!!
விதை விதைக்கிறாய்
உயிர் இல்லாமல் உடல் கிடப்பதாய்
பறை சாற்றுகிறாய்
உறவே அறுந்து தான் போனதாய் ...
உற்சாகம் கொள்கிறாய்
உலகே எதுவென்று புரியாத மூடர்கள்
ஓலங்கள் போடுகிறார்
வேற்று உலகத்தில் கூத்து நடப்பதை
ஆந்தைகள்அறிந்திடுமோ
பார்த்து சிரிக்கின்ற கூட்டுத் தலைகளின்
பித்தம்தெளிந்திடுமோ
சத்தங்கள் போட்டால்தான் முத்தங்கள் என்று
சாத்திரம் ஒன்றுமில்லை
முற்றத்தில் பூக்கவும் முத்ததில் வியர்க்கவும்
சத்தங்கள் தேவையில்லை
நான் ஒற்றையில் நிற்பதாய் நீ சத்தங்கள்
செய்வதால் நம் ஒற்றுமை சாவதில்லை...!!!

No comments:
Post a Comment