Sunday, 30 November 2014

என்னவளும் நீயல்லவா


செந்தமிழில் சொல்வடித்து தேனமுதில்
தொட்டெடுத்து கட்டழகி உன் வகிட்டில்
முத்தமாக இட்டிடவா
மல்லிகையில் மலர் கொய்து தங்கத்திலே
அதைத்தடவி மங்கை உந்தன் தலை கோதி...
மாலையாக சூடிடவா
திங்களிலே ஒளிபறித்து சந்தனத்தில் அதைக்
குழைத்து வஞ்சி உந்தன் மேனியெங்கும்
மருதாணி பூசிடவா
முக்கனியில் சாறுபிழிந்து சக்கரையில் தான்
கலந்து வித்தகி உன் சொக்கயிலே முத்திரையாய்
பதித்திடவா
பாலருகில் கொடி வளைத்து பவளங்களை அதில்
கோர்த்து முத்தழகி இடுப்பினிலே ஒட்டியாணம்
கட்டிடவா
இந்திரன் சபையினிலே சந்திரன் தலைமையிலே
ஏழுலக அழகியென்று ஏட்டிலே பதியும்படி
கட்டளையிட்டிடவா
மண்னுலகுக்கே காணிக்கையாய் மாந்தர்களில்
மாணிக்கமாய் விண்ணுலகே அஞ்சி நிற்கும்
என்னவளும் நீயல்லவா
 

No comments:

Post a Comment