Sunday, 30 November 2014

ஓட்டுப்போட்டு ஓடாய்த் தேய்ந்து போனோமே

ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓடாய்த் தேய்ந்து
போனோமே
எல்லா ஓட்டும் இங்கே இப்போ செல்லா
ஓட்டாயானதே
போட்ட ஓட்டின் உரிமை எல்லாம் எங்கள்...
உயிரைத்தானே கொல்லுதே
நியாயம் நீதி நலிந்த போதும் நாவடக்கம்
இல்லையே
நாளை மலரும் பொழுது என்ற நம்பிக்கையும்
போனதே
ஏனோ தானோ என்று மக்கள் தொடர்ந்தும் ஓட்டுப்
போடுதே
நடந்து போகும் பாதை கூட விழுந்து எழும்ப
வைக்குதே
கடந்து போன காலம் கூட இதற்கு மருந்து போட
மறந்ததே.

No comments:

Post a Comment