Sunday, 30 November 2014

நான்


உரசினால் தேய்பவன் இல்லை நான்
அலசினால் கரைபவன் இல்லை நான்
மோதினால் உடைபவன் இல்லை நான்
வீசினால் தொலைபவன் இல்லை நான்
வெட்டினால் வீழ்பவன் இல்லை நான்...
தட்டினால் சாய்பவன் இல்லை நான்
ஊதினால் அணைபவன் இல்லை நான்
தீயென எரிபவன், எனை ஒட்டிக்கொண்டால்
உன்னை கட்டிக் கொள்வேன் இல்லை
முட்டிப் பார்த்தால் உன்னை.........................!!!

No comments:

Post a Comment