Sunday, 30 November 2014

சீராக இருப்பதா நேராக நடப்பதா


சீராக இருப்பவன் காணாமல் போகின்றான்
நேராக நடப்பவன் வீணாகப் போகின்றான்
தீயாக எழுபவன் தீக்கிரை ஆகின்றான்
தீராது உழைப்பவன் சோறின்றிச் சாகின்றான்
சோத்துக்கு உழைப்பவன் சேற்றில் வாழ்கின்றான்...
ஊருக்கு உழைப்பவன் கூத்தாடி ஆகின்றான்
உறவாக நினைப்பவன் உயிரையே எடுக்கின்றான்
கொடுத்து தின்பவன் கோமாளியாகின்றான், ஐயஹோ
கெடுத்து பிழைப்பவன் கொழுத்துத்திரிகிறான்........!!!
 

No comments:

Post a Comment