Monday, 1 September 2014

பாப்பாவின் பாமாலை

உந்தன் மடலில் எந்தன் உயிரை
ஏந்திப்போகும் கவிதை கண்டேன்
கண்கள் கலங்கிக் காதல் என்னும்
உணர்வை அள்ளித் தின்றேன்

வாழ்த்து சொல்லும் போதினிலும்
உன் வலியை உணர்ந்து கொண்டேன்
வளைவுகள் இல்லா வாழ்வே ஏது
நம் வழியில் கொண்டு சேர்ப்பேன்

என் தேசம் போல் நெருங்கியில்லாவிடிலும்
மொழியைப் போல உன் மூச்சில் வாழ்வேன்
வானம் பரவும் வானவில் கண்டால்
வாழ்வில் வந்த வசந்தங்கள் என்பேன்.

உன் அன்பை கண்டு மார்பில் தட்டி
நம் உறவை உரக்கச் சொன்னேன்
பிறந்த நாளில் உன் வாழ்த்தை கண்டு
நான் இறந்து போகப்பார்த்தேன்.......... !

No comments:

Post a Comment