காதல் என்னும் காவியத்தில்
நீயும் நானும் கவிதையாய்
காலமெல்லாம் கவிபடைக்க
உன் அன்பு ஒன்றே போதுமடி.
எனை தீண்டும் தென்றல் கூட...
உந்தன் பெயரைச் சொல்லுதடி
அலைகள் உரசும் கரையில் உந்தன்
பிஞ்சுப் பாதம் கொஞ்சும் போது
என் நெஞ்சம் கூட மஞ்சம் போடி
நினைவு வெள்ளம் பொங்கி வந்து
எந்தன் கண்ணில் நீராய் சிந்துதடி
உயிரே உந்தன் உணர்வை அள்ளி
உதிரிப்பூவை நானும் எண்ணி
மார்பில் சூடிக்கொள்ளும் போது
மயங்கிப்போறேன் கள்ளி வாடி..!

No comments:
Post a Comment