உனக்காக நானடி
என்னவளே என் இதயதுடிப்பின் நாதமானவளே
நீ கரையானால் உனை தழுவும் அலையாவேன்
நீ அலையானால் உனை அலங்கரிக்கும் நுரையாவேன்
நீ நுரையானால் உனக்குள்ளே நான் காற்றாவேன்
நீ காற்றானால் உன் இசைவுக்கு ஆடும் கொடியாவேன்...
நீ கொடியானால் உனக்கே நான் கனியாவேன்
நீ கனியானால் அதற்குள் நான் விதையாவேன்
நீ விதையானால் நானே உந்தன் முளையாவேன்;
உன் சிப்பந்தி நானடி என் செல்லமே நீயடி .......!!!
No comments:
Post a Comment