Tuesday, 2 September 2014

உனக்காக நானடி



என்னவளே என் இதயதுடிப்பின் நாதமானவளே
நீ கரையானால் உனை தழுவும் அலையாவேன்
நீ அலையானால் உனை அலங்கரிக்கும் நுரையாவேன்
நீ நுரையானால் உனக்குள்ளே நான் காற்றாவேன்
நீ காற்றானால் உன் இசைவுக்கு ஆடும் கொடியாவேன்...
நீ கொடியானால் உனக்கே நான் கனியாவேன்
நீ கனியானால் அதற்குள் நான் விதையாவேன்
நீ விதையானால் நானே உந்தன் முளையாவேன்;
உன் சிப்பந்தி நானடி என் செல்லமே நீயடி .......!!!

No comments:

Post a Comment