வார்த்தையில் அடங்கா மெல்லினமே
என் வாழ்வினில் படர்ந்த பூவனமே
உணர்வினில் உறைந்த வல்லினமே
என் உறவினில் கலந்த உன்னதமே
சொத்தாகக் கிடைத்த பொக்கிஷமே
என் வாழ்வினில் படர்ந்த பூவனமே
உணர்வினில் உறைந்த வல்லினமே
என் உறவினில் கலந்த உன்னதமே
சொத்தாகக் கிடைத்த பொக்கிஷமே
என் இதயத் துடிப்பின் ஒலி நீயே
எனை ஆட்டிவைக்கும் விதி நீயே
என் உடலில் வாழும் உயிர் நீயே
எனை காயப்படுத்தும் அம்பு நீயே
என் வலியை ஆற்றும் மருந்தும் நீயே
எனை சொர்ப்பனத்தில் வாட்டும் தீயே
என் சொர்க்க வாசல் கதவும் நீயே
என் சொந்தம் என்று வந்தாய் தாயே
எனை பிள்ளையாக்கி மகிழ்ந்தாய் நீயே
உன் பாசத்தை கண்டு மயக்குவதா
உன் பாதத்தை தொட்டு வணங்குவதா
என் சுவாசம் நீ உன் வசம் நான்
என்னவளே என் எல்லாமானவளே
உன் சுவடுகள் என் சுவாசத்தில்
சிறிதேனும் வாசம் குறைந்தால்
என் உயிரின் தடம் என் உடலில் இருந்து
இடம் மாறும் என் உயிரினைத் தேடும் ...!!!
எனை ஆட்டிவைக்கும் விதி நீயே
என் உடலில் வாழும் உயிர் நீயே
எனை காயப்படுத்தும் அம்பு நீயே
என் வலியை ஆற்றும் மருந்தும் நீயே
எனை சொர்ப்பனத்தில் வாட்டும் தீயே
என் சொர்க்க வாசல் கதவும் நீயே
என் சொந்தம் என்று வந்தாய் தாயே
எனை பிள்ளையாக்கி மகிழ்ந்தாய் நீயே
உன் பாசத்தை கண்டு மயக்குவதா
உன் பாதத்தை தொட்டு வணங்குவதா
என் சுவாசம் நீ உன் வசம் நான்
என்னவளே என் எல்லாமானவளே
உன் சுவடுகள் என் சுவாசத்தில்
சிறிதேனும் வாசம் குறைந்தால்
என் உயிரின் தடம் என் உடலில் இருந்து
இடம் மாறும் என் உயிரினைத் தேடும் ...!!!

No comments:
Post a Comment