Tuesday, 11 December 2012

இப்படியும் மனிதர்கள் உலகத்திலே !





உலகம் அழியப்போகுதாம் ஊரெல்லாம் கெடிக்கலக்கம்
உனக்கு என் மீது ஏன் இந்த பகை முழக்கம, ஏண்டா
தம்பி உப்பிடி செய்துட்டாய்.? தாயாய் பிள்ளையாய்
தானேடா பழகினோம், உலகத்து கதையெல்லம்
ஓடிவந்து சொல்லுவியே
பொறுத்த கதையை பொறுப்பில்லாமல் விட்டுட்டியே
உந்த விசயத்தை உடனே ஏன் சொல்லவில்லை.......?
பனங்காய் பணியாரத்தையும் கொடுத்து திண்டேனடா
அறுந்து போவானே ஏன் பழசெல்லம் மறந்திட்டியோ
கிறகம் பிடிப்பானே கேட்டால் தான் சொல்லுவியோ
தெரிந்திருந்தால் முதலே நான் உசாரா இருந்திருப்பேன்
பக்கத்து வீட்டுப் பரிமளம் பத்தாயிரம் தரவேண்டும்
வாங்கும் போதே சொன்னாளே அந்த பாழாப்போனவள்
பணம் உனக்கு தேவையென்றால் ஒருமாதத் தவணை
எனக்கு வேண்டுமென்று,
ஐயோ ஐயோ உலகம் அழிய அவ்வளவு நாள் இல்லை
அழிஞ்ச பிறகு நான் யாரைத்தான் பிடிப்பனடா ............?
அட இராசம்மா மாமிண்ட ஆதங்கம் கேட்டு நானும்
கொஞ்சம் கதிகலங்கிப் போனேனே ........................... !!!

No comments:

Post a Comment