Tuesday, 11 December 2012

அன்பு புரியாத அசடு !



நீ கேட்ட ஒரு கேள்வி எந்தன்
உயிரைக் குடித்ததடா
இதயத்துடிப்பினிலே இடியாய்
விழுந்ததடா
கனவிலும் நினைக்காத காரியம்

நடக்கையிலே
வெறும் சிலையோ நீயென்று மனசு
கேட்குதடா
உரிமையாய் ஓடி வந்து அன்பால்
அதட்டினேனே
அதுகூடப் புரியாமல் அடிமனதில்
குத்திவிட்டாய்
உயிரை பிடித்து வைத்து உனக்காக
காத்திருந்தேன்
உன் அன்பு அவ்வுணர்வை மதிக்காமல்
போனாலும்
என் அன்பை நீதான் காலில் போட்டு
மிதித்துவிட்டாய் போடா......................!!!

No comments:

Post a Comment