Monday, 10 December 2012

அன்பில் பூத்த அழகு மலர் !



குத்துவிளக்கே என் குலமகளே உன்
நாமம் தினம் நான் உரைப்பதினால்
என் நாவூறும் உமிழ்நீரும் பேரின்பம்
கொள்ளுதடி கர்வமாய் முறைக்குதடி...
பட்டுமேனி கட்டழகி சிட்டு உன்னை
கண்ட கண்கள் கட்டத்த காளைபோல்
கட்டளையை மீறுதடி..
கருமுரல் கூந்தலழகே கருவப்பழ உதட்டழகே
கொத்தித்தின்னும் விழியழகே கொக்கரிக்கும்
கழுத்தழகே
குத்தரிசி சிரிப்பழகே குயில்கீதப் பேச்சழகே
திகட்டாத இடையழகே கோலம் போடும்
நடையழகே
நாகதாளி பாதழகே நாவூறும் அவளழகே
அழகே அழகே இது அழகே, அழகான
அழகே இவள் அழகே, என் முட்டைகண்ணியே
கொட்டைப்பாக்கே,.......... மன்மதனும் பசியாற
மாங்கனிகள் தாங்கிநிற்கும் தேவதையே
இதையெல்லாம் தாண்டியதே உன் அன்பழகே
இதுதான்டி என் உயிரில் கலந்த பேர் அழகே... !!!

No comments:

Post a Comment