மனிதனின் வாழ்வினில் மாற்றங்கள்
மறுக்கமுடியா மந்திரம் என்பது
தடுக்கமுடியா தருணங்கள் ஆகுதே
மனதினால் மண்டியிட்டாலும் அதன்
சண்டித்தனமோ குறைவதும் இல்லை,
மறுக்கமுடியா மந்திரம் என்பது
தடுக்கமுடியா தருணங்கள் ஆகுதே
மனதினால் மண்டியிட்டாலும் அதன்
சண்டித்தனமோ குறைவதும் இல்லை,
பக்தனும் இங்கே பித்தனாவான்
பித்தனும் இங்கே சித்தனாவான்
உற்றானும் இங்கே மாற்றானாவான்
வேற்றானும் இங்கே பற்றானாவான்
கரும்பான குறும்பு செய்பவனும் இங்கே
எறும்புபோல் கூனிக் குறுகுவான்
விருந்தாக கிடைத்த அன்பும் இங்கே
மருந்தாக மாறும் போது இரும்பான
உள்ளம் கூட வருந்தாமல் போவதுண்டோ
ஏன் இந்த நிலையென்று யாரிடமோ
நான் கேட்டால். உன் சொந்த நிலை
இதுவோ என்று கைகொட்டி சிரிக்கின்றார்
ஐயோ என் கண்கள் கலங்கி நிற்கின்றேன்
எனை காப்பாற்ற யாரும் உண்டோ.......???
பித்தனும் இங்கே சித்தனாவான்
உற்றானும் இங்கே மாற்றானாவான்
வேற்றானும் இங்கே பற்றானாவான்
கரும்பான குறும்பு செய்பவனும் இங்கே
எறும்புபோல் கூனிக் குறுகுவான்
விருந்தாக கிடைத்த அன்பும் இங்கே
மருந்தாக மாறும் போது இரும்பான
உள்ளம் கூட வருந்தாமல் போவதுண்டோ
ஏன் இந்த நிலையென்று யாரிடமோ
நான் கேட்டால். உன் சொந்த நிலை
இதுவோ என்று கைகொட்டி சிரிக்கின்றார்
ஐயோ என் கண்கள் கலங்கி நிற்கின்றேன்
எனை காப்பாற்ற யாரும் உண்டோ.......???

No comments:
Post a Comment