Tuesday, 25 December 2012

மடியில் உறங்கும் மழலை நீயே !


அன்பே இப்போதுதான் புரிந்துகொண்டேன் நீ ஏன்
என்னை அடிக்கடி வாட்டி வதைக்கின்றாய் என்று
உன் அன்பில் மூழ்கி நான் இறந்துவிடுவேன்
என்பதினால் தானோ என் உயிரை காக்க இப்படி?
ஆமா உண்மைதானடி நீ கொடுக்கும் வலிகளை
கூட என்னால் தாங்கிட முடியும், ஆனால் உனது
அன்பில் மூழ்கி மூச்சு முட்டுதடி என் சுவாசமே
பூர்வஜென்மம் போன ஜென்மம் என்பார்களடி
அதை நான் இப்போது முழுமையாக நம்புகின்றேனடி
அன்று என் அன்னையின் மடியில் உறங்கியசுகத்தை
இன்று உன் அருகாமையில் உணர்ந்தேனடி...............!!!

No comments:

Post a Comment