Monday, 12 November 2012

உயிரும் நீயே என் உணர்வும் நீயே !



என் எல்லாமனவளே நீயே ....
பருவமழைபோல் வந்தாய் என்
பாதி உயிரை தின்றாய்
உருவம் இல்லா ஓவியமாய் என்
உயிரினில் நுழைந்தாய், பின்

உருவமெனும் ஒளிகொடுத்து என்
உணர்வில் ஏறி அமர்ந்தாய்
நீயே எந்தன் உறவு என்று என்
கனவில் வந்து வதைத்தாய்
இறுதிவரை நீதான் என்று என்
உதிரத்திலே கலந்தாய்
இதயம் முழுதும் அன்பிருந்தும்
இடைக்கிடை வெடித்தாய் இன்று
உனக்கு தலை வலித்தால் நான்
தையிலம் போடுகிறேன்
உனக்கு காச்சல் வந்தால் என்
இதயம் நொருங்குதடி
என் உயிரும் ஊஞ்சலாடுதடி
உன்னை சுமப்பதினால் அதுவும்
போக மறுக்குதடி என் வாழ்வும்
இன்று கசக்குதடி.............

No comments:

Post a Comment