Monday, 8 December 2014

வாழ்கை போடும் கணக்கு


ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று ஒருத்தன்
சொன்னான் ஓடி வந்து
இரண்டில் ஒன்று கடந்து போனால் மிகுதி
உள்ளது மூன்று என்று
நடந்து போகும் இவனின் கதையால் துவண்டு...
போனேன் நானும் அன்று
நாலும் நாலும் எட்டாய்ப் போக நடுவில் உள்ளது
பத்து என்றான்
குத்துமதிப்பாய் சொல்லிவிட்டேன் பித்துப்பிடித்தவனே
வரட்டா என்றான்
கட்டிப்பிடித்து அவனை மடக்கி காலில் விழுந்து
வணங்கி எழுந்து
சுத்தமாக எனக்கு புரியல்ல என்றேன், உத்துப்பார்த்து
சிரித்து விட்டு
செத்துப் போன வெற்றுடலுக்கு சத்துணவு கொடுக்கச்
சொன்னான்.......!
 

No comments:

Post a Comment