Monday, 8 December 2014

பள்ளிப் பாதயிலே முளைத்த கள்ளிச்செடி


சங்கு சுட்டு விற்ற காசில் நான்
சங்கத்தமிழ் கற்று வந்தேன்
பூம்பாளை பொறுக்கி விற்று
புத்தகத்துக்கு உறைபோட்டேன்
கங்குமட்டை காலில் அணிந்து ...
நொங்கு பொறுக்கச்செல்வேன்
கொக்காரை எடுத்துவந்து என்
அக்காளைச் சமைக்க வைப்பேன்
பன்னாடைக்கிடையினிலே பறநாகம்
படுத்திருந்து தன் பல்லாலே
பதம் பார்க்க, பரியாரி வீட்டினிலே
நான் பலமாதங்கள் படுத்தேனே
எனக்கு பரலோகப் பதவி என்று
பரியாரி சொல்லக் கேட்டு பரிதாபப்
பட்ட அப்பன் பெரும் குடிகாரன்
ஆனதாலே என் பள்ளிப் பாதயிலே
பல கள்ளிச் செடி முளைத்ததடா ...!!!
 

No comments:

Post a Comment