தாலாட்டும் தென்றலே என்
தணியாத தாகமே, ...... உன்
வாசல் தோறும் என் அன்பை
தோறணமாய் தொங்க விடுவேன்
...
தோப்புக்களில் நாம் உறவாடி
மகிழாவிடினும் உனது ஒற்றை
வார்த்தையில் என் உலகையே
மறப்பவன் நானல்லவோ..
பாப்பா பாப்பா என்று நான் உனை
பாசத்தோடு அழைத்தாலும் என்
ஆத்தாவும் நீயல்லவோ ,.. உன்
சுவாசம் என் வாழ்வின் வாசம்
அன்னையாக உனை நினைத்தாலும்
என் இதய மடியில் தவழும் மழலை
நீயல்லவோ அதை நீ அறியாயோ
என்னவளே என் உயிரே உன் ஆயுள்
நீண்டிட என் ஆயுளையும் உனக்கே
அர்ப்பணிப்பேன் நீயே என் உலகமடி

No comments:
Post a Comment