Monday, 25 March 2013

நான் அசுரனும் இல்லை முனிவனும் இல்லை



ஆசையை காட்டி உலகை வதைத்தேனா
ஆம் மாபெரும்நடிகன் தான் உண்மையிடம்
இருந்து விருது வாங்கிய மகாநடிகன் தான்
நான் வானத்தில் இருந்து குதிக்கவில்லை
யாருக்கும் வழிகாட்டவும் வரவுமில்லை
தேவர்கள் எனை வாழ்த்தி அனுப்பவில்லை
சந்தனம் பூசிய தேகமும் இல்லை எனக்கு
தங்கத்தால் சூடிய முடியும் இல்லை, நான்
சாட்டையை கையில்வைத்து அலையவுமில்லை
சாவினை தடுக்கும் வித்தையும் என்னிடமில்லை
நான் அழியா வரம் பெற்ற அசுரனுமில்லை
அழிந்துபோவன சாபம் கொடுக்க முனிவனுமில்லை
பெண்களை காக்க வந்த புருசோத்தமனும் இல்லை
இந்த பொன்னான பூமியில் நான் யோகியுமில்லை
பொறுப்போடு வாழும் யோக்கியனுமில்லை நான்
இப்படியொரு பரிசு இதுவரை வாங்கியதுமில்லை
ரொம்ப நிறைவாயிருக்கு மிக்க நன்றி், என்னை சிறு
கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா.......... ???

No comments:

Post a Comment