Monday, 25 March 2013

சோதனை கண்டு வேதனை கொள்ளாதே


தோல்விகளை தோழனாக்கி
அதன் துணைகொண்டு ..நீ
வெற்றிகளை எட்டித்தொடு

முன்னேறும் பாதைகளில் முட்கள்
...
இருப்பதுண்டு நீ அஞ்சி பின்னோக்கி
அடியெடுத்தால் அது மீண்டும் உன்
காலிலே குத்துமடா

தொலைனோக்கு பார்வைகளை நீ
தோள் கொண்டு நடந்தாய் என்றால்
வானம் கூட உன் தொடுதூரமடா

சாதனை செய்யும் போது சறுக்குவது
ககசமடா சோதனை கண்டு வேதனை
கொண்டாய் என்றால் உன் கல்லறையைக் கூட
சில்லறையாய் மதிப்பாரடா

காட்டிலே வாழ நினைத்தால் மிருகமாக
இருந்துவிடு நாட்டிலே வாழ்வதென்றால்
மனிதனாக மாறிவிடு

விதி என்று எண்ணி வீதியிலே சாய்ந்தாய்
என்றால் மதி கூட உன் வாழ்வில் சதி
செய்யும் மறந்திடாதே.

No comments:

Post a Comment