உன் சுதந்திரம் இழந்து துவண்டது போதும்
என் சுயநலத்தில் நீ சுழல்ந்ததும் போதும்
அன்பென்று நம்பி நீ அழிந்ததும் போதும்
போதும் போதும் இனி எல்லாம் போதும்
என் உயிர் போகும் போதும் உன்னைத்தேடும்
என் கடைசி மூச்சிலும் உன் உயிரே வாழும்
உலகை விட்டு போகும் போது உன் நினைவை
தாங்கி என் ஆவி வாடும் ..... ஹா ஹா ஹா
ஐயோ ஹா ஹா ஹா ஹா ஐயோ ஹா ஹா..
இப்படி எல்லாம் சொல்லி உன்னை அப்படியே
விட்டுவிடுவேன் என்று நினைத்தாயோ பெரும்
பருப்பாட்டம் கதை பேசி என்னை நெருப்பாட்டம்
எரித்தாலும் நான் பொறுப்போடு தான் இருப்பேன்
உன்னை வெறுக்காமல் அணைத்திடுவேன், விதி
எல்லாமே என் விதி என்பாயே மடைச்சி, ஆமா
உன் விதியும் நானே உன் விதியை வெல்ல வந்த
மதியும் நானே உன் கதியும் நானே உன் பதியும்
நானே என் சகியே தான் நீயே ..........................

No comments:
Post a Comment