Monday, 25 March 2013

இதயத்தின் ஓசை புரிகிறதா ?




வெள்ளை உள்ளத்தால் கொள்ளையடிக்கின்றாள்
மஞ்சள் குங்குமம் என் மார்பில் பூசுகின்றாள்
இடுப்பு மடிப்பிலே கொளுக்கி போடுகின்றாள்
தடுக்கி நான் விழுகின்றேன் கள்ள சிறுக்கி சிரிக்கின்றாள்
பென்சில் விரல்களால் நெஞ்சில் கிறுக்கி வைக்கின்றாள்
முறுக்கு மீசையை தா கடித்து நறுக்கி எறிகின்றாள்
வாயில் வந்ததெல்லாம் வாரிக் கொட்டுகின்றேன்
அவளோ வானவில்லாட்டம் வளைந்து ஜொலிக்கின்றாள்
ஏழுநிறங்களை அவள் எண்ணத்தில் காண்கின்றேன்
பாலைவனத்திலே நான் பஞ்சாட்டம் எரிகின்றேன்
சோலை வனமாக எனை தொட்டு தழுவுகின்றாள்
பத்தரைமணிக்குப் பின் என் நித்திரையில் முத்திரை பதிப்பவளே,
காமத்துப்பாலில் கலப்படமில்லாமல் முழுதாய் குடித்தால்
நம் மூளைக்கு நல்லதாம்
பெண்ணின் வாசனை ஆணுக்கு நல்லதென்று காமசூத்திரம் ஆய்வு பண்ணிச் சொல்லுதாம் .......!

No comments:

Post a Comment