Monday, 25 March 2013

சந்தர்ப்பத்தை தவற விட்டு சாட்டு சொல்லாதே


சறுக்கும் என்று சாட்டுச் சொல்லி
சந்தர்ப்பத்தை இழக்காதே பறவை
கூட இறக்கை விரித்து உயரப்
பறக்கும் இரைக்காக..

கழுவுற நீரில் நழுவுற மீனாக இருக்க
நீயும் நினைக்காதே நடப்பது எல்லாம்
நடக்கட்டும் என்று கிடைப்பது எல்லாம்
கிடைதிடும் என்றும் நடக்கிற மனிதனை
தடுக்காதே..

கொடுப்பதற்கு உனக்கு யாரும் இல்லை
எடுப்பதற்கு இங்கே எத்தனை பேரடா
இந்த அடிப்படைகூடத் தெரியாது வாழ்ந்தால்
உந்தன் அடுப்புக்குள் பூனைகள் படுப்பதை
தடுப்பது யாரடா.............................................. ???

No comments:

Post a Comment