Monday, 25 March 2013

குடை பிடிக்கும் திருக்குறள்



தாஜ்மகால் நிழலில் நான் தவமிருக்கின்றேன்
தனியாக இல்லை என்னவள் துணையோடு
மழை பொழியும் வேளை குடையாகிறாள்
புரியாமல் தவிக்கையில் விடையாகிறாள்
தடுமாறி நான் வீழ்கையிலே மருந்தாகிறாள்
கண்விழித்து பார்க்கையிலே விருந்தாகிறாள்
வரமாக எனக்கு கிடைத்த கொடை இவள்
வாழ்க்கையை நடத்திச்செல்லும் படை இவள்
என் அன்பே நீதானடி எனக்கு திருக்குறள்....!!!

No comments:

Post a Comment