புதுமையென புளுகும் மடமைகள்
காகிதத்தில் அது மெல்ல தவழ்ந்தது,....
நாம் புதுமை என தினம் புளுகுகின்றோம்
புரட்சி என்று உளறுகின்றோம் வறுமை
கோட்டை தாண்டிடாமல் வழியை தானே
அடைக்கின்றோம் கவிதை பல வடிகின்றோம்
கருவை உள்ளே புதைக்கின்றோம் கருத்து
சொல்ல மறக்கின்றோம் கருணை கொண்ட
உள்ளங்களை கவனிக்க ஏனோ மறுக்கின்றோம்,
விழியை நாமே மூடிக்கொண்டு விடிவைத்தேடி
அலைகின்றோம் விளையும் பயிரின் முளையை
கண்டால் விழுந்து விழுந்து சிரிக்கின்றோம்
துளிரும் தளிரை கிள்ளித்தானே எறிகின்றோம்.!
No comments:
Post a Comment