Monday, 3 September 2012

அறியாமையின் பலவீனம் ! ***



இது பரிதாபமா இல்லை
பழிவாங்கும் படலமா..
இது அறியாமையா எங்கள்
அறிவின்மையா.
அடக்குபவன் யாரும் இல்லை
அடங்குவதே எங்கள் குணம்..
பணம் கண்டால் அடங்குவோம்,
பதவி தந்தால் மயங்குவோம்,
சொத்துக்கு ஏங்குவோம் பின்பு
சோகத்தில் நீந்துவோம்,,
வாய் கிழியக் கத்துவதில்
வரலாறு படைப்பவர் நாம்
கைகோர்த்து வலுசேர்த்து வாழ
மறந்தவர் நாம் மறுப்பவர் நாம் ...

No comments:

Post a Comment