Monday, 3 September 2012

நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை ! ***


விழியிலே நீர் தாங்கி உதடுகள் தடுமாறி

இதயத்தில் வலி சுமந்து துடிப்பது ஏனோ ?
நினைப்பது எல்லாம் நலமுடன் நடந்தால்
பிழைப்புக் கூட இங்கே பிழையாய்ப் போகும்
நடப்பது எல்லாம் நலமெனக் கொண்டு நீயோ

கிடைப்பதை வைத்து உடைத்திடு தடையை
சிரிப்பது கூட சிலரது வாழ்வில் வெளிப்படையாக
உதிர்ப்பது கடினம், இங்கோ குலைக்கின்ற நாயோ
கடிக்காதென்றும் அறுக்கிற வாளோ குலைக்காதென்றும்
பழமொழிகள் மட்டும் குறையவும் இல்லை, உன்
அறிவென்னும் வாள் எடுத்து அறியாமையை நீ வெட்டு
புரியாத புதிர் எல்லாம் புழுதியாய்ப் பறந்திடட்டும்....... !!!

No comments:

Post a Comment