Monday, 24 September 2012

அன்பால் மறைந்த கண்ணீர் ***



என்னவளே என் எல்லாமானவளே
உன் பொல்லாதனத்தால் நான்
புழுவாய் துடித்தாலும் நீயே என்
இல்லாள் என நினைத்தால் என்
இதயம் குளிருதடி, சொல்லால் எனை

வாட்டி சோகத்தில் தள்ளினாலும் உன்
அன்பால் எனை வாரி மெல்ல அள்ளி
அணைக்கையிலே சொல்லெனா துயரம்
கூட பஞ்சாய்ப் பறக்குதடி புண்ணான
இதயமோ பூமேடை ஆகுதடி முத்தாரமே
முழுமதியே என் முல்லைச் செடியே உன்
கள்ளச்சிரிப்பே போதுமடி நான் காவியங்கள்
படைப்பதற்கு, உன் ஓரப்பார்வை போதுமடி
நான் ஓவியனாய் ஆவதற்கு இவை எல்லாம்
இருந்தாலும் உன் அன்பு ஒன்றே போதுமடி
என் கண்ணீரை நான் நிறுத்த .................. !!!!!!!

No comments:

Post a Comment