Monday, 24 September 2012

கவிதை அவளே என் கவிதை அவளே ! ***



கவிதை எழுதுகின்றேன் நான் கவிதை எழுதுகின்றேன்
காலம் தோறும் நான் பல கவிதை எழுதுகின்றேன்
அவளை எழுதுகின்றேன் என் அவளை எழுதுகின்றேன்
என் கவிதை அவள் என்று நான் கவிதை எழுதுகின்றேன்
என் உயிரே அவள் என்று என் உயிரில் எழுதுகின்றேன்

என் உறவே அவள் என்று என் உணர்வில் எழுதுகின்றேன்
என் உறவில் கலப்பாளா என் உயிரை எடுப்பாளா என்று
அவளை கேட்டு நான் அதையும் எழுதுகின்றேன்..
உயிரே நீயின்றி என் உலகம் ஊமையடி உன் உறவே
இல்லை என்றால் என் உயிரும் தொல்லையடி
இதையும் எழுதுகின்றேன் என் இதயம் எழுதுகின்றேன்...!!!

No comments:

Post a Comment