Monday, 24 September 2012

இதயத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி..!


விண்ணோடும் முகிலோடும் நான்
விளையாடி மகிழவில்லை நான்
வானவில்லில் நிறமெடுத்து வண்ணம்
தீட்டி மகிழவில்லை என்னவளே உன்
இதழ்களிலே கருவெடுத்து அதில்

கற்பனையை குழைத்தெடுத்து தினம்
கவிபாடி மகிழ்ந்து வந்தேன் உன்
சொல்லெடுத்து சேர்த்து வைத்து
தோரணமாய் கட்டிவைத்து என்
நினைவுகளில் தொங்க விட்டு அதை
தொட்டு ரசிக்கையிலே என் நெஞ்சில்
பலகோடி பட்டாம்பூச்சி பறக்குதடி
நீ போகும் வழியெல்லாம் விழிமூடித்
தூங்காமல் வழிகாட்டியாக என்றும்
உன் நிழல் போல் தொடர்ந்திருப்பேன்.... !!!


No comments:

Post a Comment