Wednesday, 22 March 2017

சுயம்வரம் நடத்தும் சுயநலம்

சுயநல உச்சத்தில்
சுயம்வரம் நடக்கின்றது


சுகாதாரம் இல்லாத
சுதந்திரம் நிலைக்கின்றது



தலையாகக் கடமைகள்
தலைகூனி கிடக்கின்றது


தார்ப்பரியம் பேணாத
தர்மங்கள் ஜொலிக்கின்றது


பாசங்கள் எல்லாம் இங்கு
பகல்க் கனவாகும்


வேஷங்கள் மட்டும் இனி
வேதங்கள் ஓதும்


நியாயங்கள் தர்மங்கள்
நிற்கதியாகும்


நாளைய உலகு அது
நமக்கென்னவென்று


நாய்களும் பேய்களும்
நர்த்தனம் ஆடட்டும்..!

No comments:

Post a Comment