எனை ஆட்சி புரியும் அரும்சுடரே
போற்றி புகழ்ந்த பொற்சிலையே
எனை பதுக்கிவைத்த பொக்கிசமே
என் நாடித் துடிப்பின் நாயகியே
ஊட்டி வளர்க்கும் முழுமதியே
என் உயிரில் தவழும் உன்னதமே
உறிஞ்சி குடிக்கும் இராட்சசியே
கொட்டிக் கிடந்த நவ மணியே
வெட்டியெடுத்த கயல்விழியே
ஒட்டிக் கொண்ட பெரும் சுகமே
நீ உத்துப் பார்த்தால் கனிரசமே
தேகம் முழுதும் தேன் சுவையே
என் தாகம் தீர்க்கும் மதுக்கடலே
சிணுங்கி சிவக்கும் சித்திரமே, நீ
மலர்ந்து ஜொலிக்கும் மலர்வனமே
படர்ந்து கிடக்கும் பனித்துளியே
பாவை வடிவில் பைந்தமிழே,
பருவம் சுமக்கும் பால் குடமே
என் பகலும் இரவும் உன் வசமே...!
ஊட்டி வளர்க்கும் முழுமதியே
என் உயிரில் தவழும் உன்னதமே
உறிஞ்சி குடிக்கும் இராட்சசியே
கொட்டிக் கிடந்த நவ மணியே
வெட்டியெடுத்த கயல்விழியே
ஒட்டிக் கொண்ட பெரும் சுகமே
நீ உத்துப் பார்த்தால் கனிரசமே
தேகம் முழுதும் தேன் சுவையே
என் தாகம் தீர்க்கும் மதுக்கடலே
சிணுங்கி சிவக்கும் சித்திரமே, நீ
மலர்ந்து ஜொலிக்கும் மலர்வனமே
படர்ந்து கிடக்கும் பனித்துளியே
பாவை வடிவில் பைந்தமிழே,
பருவம் சுமக்கும் பால் குடமே
என் பகலும் இரவும் உன் வசமே...!

No comments:
Post a Comment