Monday, 13 March 2017

கொட்டிக்கிடந்தது ஒட்டிக்கொண்டது

காட்சி கொடுத்த கதிரொளியே
எனை ஆட்சி புரியும் அரும்சுடரே
போற்றி புகழ்ந்த பொற்சிலையே
எனை பதுக்கிவைத்த பொக்கிசமே



என் நாடித் துடிப்பின் நாயகியே
ஊட்டி வளர்க்கும் முழுமதியே
என் உயிரில் தவழும் உன்னதமே
உறிஞ்சி குடிக்கும் இராட்சசியே


கொட்டிக் கிடந்த நவ மணியே
வெட்டியெடுத்த கயல்விழியே
ஒட்டிக் கொண்ட பெரும் சுகமே
நீ உத்துப் பார்த்தால் கனிரசமே


தேகம் முழுதும் தேன் சுவையே
என் தாகம் தீர்க்கும் மதுக்கடலே
சிணுங்கி சிவக்கும் சித்திரமே, நீ
மலர்ந்து ஜொலிக்கும் மலர்வனமே


படர்ந்து கிடக்கும் பனித்துளியே
பாவை வடிவில் பைந்தமிழே,
பருவம் சுமக்கும் பால் குடமே
என் பகலும் இரவும் உன் வசமே...!

No comments:

Post a Comment