Monday, 13 March 2017

உயிர்குடிக்கும் கழுகுகள்

புறப்படும் தருணத்தில்
அகப்படும் பறவைகள்
இதயத்தின் யன்னலில்
இரத்தத்தின் சுவடுகள்



துளிர்த்திடும் வேளையில்
துண்டாடும் அவலங்கள்
விரக்தியின் எல்லையில்
விரியாத முல்லைகள்


சரித்திரம் படைப்பினில்
சதிராடும் சாத்தான்கள்
உழைத்திடும் முனையினில்
உயிர்தின்னும் கழுகுகள்


சிரித்திடும் நெஞ்சினில்
சில்லறைச் சிதறல்கள்
சிந்திக்கும் தன்மையில்
சீர்கெட்ட வண்ணங்கள்


சொர்க்கமும் நரகமும்
சொல்லட்டும் சுகத்தினை
பக்கத்தில் சென்று யார்
பார்த்தவர் நம்மிடம் ..?

No comments:

Post a Comment