Monday, 13 March 2017

தோரணம் கட்டும் தாரகை

தேகம் திகட்டாத என் தேவதையே
வானம் தலைகூனும் வானவில்லே
என் பருவம் மீட்டெடுத்த தோரணமே


கர்வம் தலைக்கேற்றும் தாரகையே
என் பாதி உயிர் தின்ற பாதகியே, எனை
மேவி நிலை கொண்ட மோகினியே

மாதர் குலம் ஏங்கும் மான்விழியே
மயக்கி வதைக்கும் மாதுளையே
என் மதியும் விதியும் உன்னிடமே !

No comments:

Post a Comment