வானம் தலைகூனும் வானவில்லே
என் பருவம் மீட்டெடுத்த தோரணமே
கர்வம் தலைக்கேற்றும் தாரகையே
என் பாதி உயிர் தின்ற பாதகியே, எனை
மேவி நிலை கொண்ட மோகினியே
மாதர் குலம் ஏங்கும் மான்விழியே
மயக்கி வதைக்கும் மாதுளையே
என் மதியும் விதியும் உன்னிடமே !
என் பாதி உயிர் தின்ற பாதகியே, எனை
மேவி நிலை கொண்ட மோகினியே
மாதர் குலம் ஏங்கும் மான்விழியே
மயக்கி வதைக்கும் மாதுளையே
என் மதியும் விதியும் உன்னிடமே !

No comments:
Post a Comment