Monday, 13 March 2017

நஞ்சு வைத்தாலும் என் குஞ்சு நீயடி

வம்புக்கு அடங்கா ஆடவன் ஒருவன்
தூய அன்பென்று வணக்கினான்..

தன் ஆயுளை அள்ளி பூக்களாய் பின்னி
பாதத்தில் கொட்டினான்

அவன் பண்பினை அறியா பாலகி ஒருத்தி
சொற்கற்களை வீசினாள்

அவன் நெஞ்சினை பிளக்க நொந்துதான்
சிவக்க விழி நீரினில் மூழ்கினான்

நஞ்சிலே பழுத்த பிஞ்சினைப் போலவே
நெஞ்சம் தான் வெந்ததே

அவள் மஞ்சத்தை வென்றவன் வஞ்சகன்
என்றதால், மனம் கல்லறையானதே

நாணயம் கொண்டவன் போதனை செய்தும்
ஏன் வேதனை அள்ளித்தந்தாள்

கற்பனை தனிலே ஒப்பனைபண்ணி ஏன்
உயிரினை மென்று தின்றாள்

மிஞ்சி நீ போனாலும் நெஞ்சினை பிளந்தாலும்
என்றும் எந்தன் குஞ்சு நீ அல்லவா !

No comments:

Post a Comment